search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமிகள் பலி"

    • தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை அதன் டிரைவர் இடது பக்கமாக திடீரென திருப்பினார்.
    • பரந்தாமன் அவரது மனைவி காவேரி மற்றொரு மகள் இளவரசி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி காவேரி. தம்பதியினரின் மகள்கள் கார்த்திகா ஸ்ரீ (வயது 9), பேரரசி (6), இளவரசி.

    ஆங்கில புத்தாண்டையொட்டி ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பரந்தாமன் முடிவு செய்தார். அதன்படி பரந்தாமன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பைக்கில் ஆம்பூர் நோக்கி சென்றார்.

    அப்போது ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை அதன் டிரைவர் இடது பக்கமாக திடீரென திருப்பினார்.

    அப்போது பரந்தாமன் சென்ற பைக் லாரியில் மோதியது. அனைவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    அப்போது கார்த்திகா ஸ்ரீ, பேரரசி ஆகியோர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    பரந்தாமன் அவரது மனைவி காவேரி மற்றொரு மகள் இளவரசி ஆகியோர் காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

    தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரி சக்கரத்தில் சிக்கி இறந்த 2 சிறுமிகளின் பிணத்தையுய் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி கோவிலுக்கு சென்றபோது 2 சிறுமிகள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணிநேரம் போராடி சிறுமிகள் கோமதி, ஹேமலதாவை பிணமாக மீட்டனர்.
    • திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டைகளில் மழை நீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.

    திருத்தணி:n

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சந்தை வாசல் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி மல்லிகா (வயது 65). இவரது உறவினரான திருத்தணி பெரியார் நகரில் வசித்து வந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். இவரது 30-வது நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மல்லிகா மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான மாரிமுத்து மகள் கோமதி (14), விநாயகம் மகள் ஹேமலதா (15) ஆகியோர் திருத்தணிக்கு வந்தனர்.

    இவர்களில் கோமதி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பும், ஹேமலதா 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மல்லிகா, கோமதி, ஹேமலதா 3 பேரும் பெரியார் நகர் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றனர். தற்போது அந்த குட்டையில் அதிக அளவு தண்ணீர் உள்ளது.

    குளித்து கொண்டு இருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் கோமதியும், ஹேமலதாவும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மல்லிகா சிறுமிகள் 2 பேரையும் காப்பாற்றி முயன்றார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

    அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் பணியாற்றி வரும் மணிகண்டன் மற்றும் தொழிலாளர்கள் மீட்க முயன்றனர். இதில் மல்லிகாவை மட்டும் பிணமாக மீட்டனர். சிறுமிகள் 2 பேரும் நீரில் மூழ்கி மாயமாகி விட்டனர்.

    இதுகுறித்து திருத்தணி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணிநேரம் போராடி சிறுமிகள் கோமதி, ஹேமலதாவை பிணமாக மீட்டனர்.

    பலியான சிறுமிகள் உள்பட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா, சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிறுமிகள் உள்பட 3 பேர் கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டைகளில் மழை நீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இதில் அப்பகுதி மக்கள் குளிக்கும்போது அடிக்கடி அசம்பாவிதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க கல்குவாரி குட்டைகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 3 சிறுமிகளும் கோவில் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென தவறி குளத்தில் விழுந்தனர்.
    • குளத்தில் விழுந்த 3 சிறுமிகளும் தங்களை காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பைரெட்டி பள்ளியை சேர்ந்தவர் கதிரப்பா.

    இவரது உறவினர்கள் வேலூர் மாவட்டம் அரவட்லா பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம், அவரது மகள் பவ்யா (16), மணிமேகலை மற்றும் அவரது மகள் மவுனிகா (8), கதிரப்பா மகள் கவுதமி (13) மற்றும் உறவினர்கள் நேற்று காலை பைரெட்டி பள்ளி அருகே உள்ள நிகி தேவாடி காலபைரவர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

    தற்போது கால பைரவர் கோவில் அருகே உள்ள காட்டேரம்மா கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன் அருகில் குளம் ஒன்று உள்ளது. கதிரப்பா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது 3 சிறுமிகளும் கோவில் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென தவறி குளத்தில் விழுந்தனர். குளத்தில் விழுந்த 3 சிறுமிகளும் தங்களை காப்பாற்றும்படி அபய குரல் எழுப்பினர்.

    அவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமிகளை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் 3 சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கினர். அங்கிருந்த சிலர் குளத்தில் இறங்கி சிறுமிகளை தேடிய போது நீண்ட நேரத்திற்கு பிறகு 3 சிறுமிகளின் உடல்களும் பிணமாக மீட்கப்பட்டன.

    இது குறித்து பைரெட்டி பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகளில் சிலர் கடலுக்குள் நீந்தி சென்று மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.

    நாகப்பட்டினம்:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜகம்பீரம் கிராமத்தை சேர்ந்தவர் சேவியர். இவரது மகள்கள் ஆரோக்கியா ஷெரீன் (வயது 18), ரியானா (13). அதே பகுதியை சேர்ந்த பெஞ்சமின் மகள் சஹானா (14). இவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த 12 பேருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் தேவாலயத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கினர்.

    இன்று காலை அவர்கள் அனைவரும் வேளாங்கண்ணியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு கடலில் குளித்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் ஆரோக்கியாஷெரீன், ரியானா, சஹானா ஆகிய 3 பேரும் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினர்.

    அதிர்ச்சியடைந்த உடன் வந்தவர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.

    இதையடுத்து சுற்றுலா பயணிகளில் சிலர் கடலுக்குள் நீந்தி சென்று மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து கீழையூர் கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி விடுமுறை என்பதால் 2 சிறுமிகளையும் சேத்துக்குழி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் பெற்றோர் விட்டு, விட்டு சென்று விட்டனர்.
    • காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் அறிவு செல்வன். இவருடைய அண்ணன் தமிழ்செல்வன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    அறிவு செல்வன் மகள் சுஜித்ரா (வயது 11) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். இதேபோல் தமிழ்செல்வன் மகள் சசிரேகா (வயது 7). 2-ம் வகுப்பு மாணவி.

    இவர்களுடைய பாட்டி பாப்பாத்தி வீடு சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை அடுத்த பண்ணவாடி அருகே உள்ள சேத்துக்குழி கிராமத்தில் உள்ளது.

    இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் 2 சிறுமிகளையும் சேத்துக்குழி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் பெற்றோர் விட்டு, விட்டு சென்று விட்டனர்.

    இன்று காலை பாப்பாத்தி துணி துவைப்பதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றார். அப்போது உடன் 2 சிறுமிகளையும் அழைத்து சென்றார். 2 சிறுமிகளும் ஆற்றில் இறங்கி விளையாடினர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை கண்டு பாப்பாத்தி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து ஆற்றில் இறங்கினர். அதற்குள் சுஜித்ரா, சசிரேகா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்களது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்னர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×